ஆத்தூர் : நகராட்சி தூய்மை பணியாளர்களின் சங்க ஆலோசனைக் கூட்டம் !

ஆத்தூர் : நகராட்சி தூய்மை பணியாளர்களின் சங்க ஆலோசனைக் கூட்டம் !

ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூர் நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை ௯ட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் நகராட்சி நகராட்சி தூய்மை பணியாளர்களின் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டம் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் ந.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர் இல. கலைமணி அவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆத்தூர் வட்ட கிளை தலைவர் ந. சுந்தர்ராஜன் அவர்களும் முன்னாள் நகராட்சி ஆணையாளர் மா. கலைமணி அவர்களும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரபாபுலு அவர்களும் ஆத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் காமராஜ் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பார்வதி செயலாளர் சத்தியா பொருளாளர் கொளஞ்சி ஆகியோர்களும் ஆத்தூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் முனியன் செயலாளர் பூவரசன் பொருளாளர் செல்லமுத்து இணை துணை பொறுப்புகளில் உள்ள ஜெயசுதா, மணிமேகலை உள்ளிட்ட தோழர்களும் தங்களது கருத்துக்களை பேசினார்கள் கூட்டத்தில் உறுப்பினர்களும் சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசியல் நிலை குறித்தும் இந்திய அரசியல் நிலை குறித்தும் நடைபெற இருக்கின்ற 19 4 2024 அன்று பாராளுமன்றத் தேர்தலில் நமது பணியாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவை தலைவர்கள் தோழர்களும் அதற்கு வரவேற்றார்கள் துணை தலைவர் தோழர் தேவி நன்றியுரை ஆற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story