வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தில் நரிஓட்டம் எனும் யானை விளையாட்டு

வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தில் நரிஓட்டம் எனும் யானை விளையாட்டு

நரி ஓட்டம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் வைபவம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி கோவில் உள்ளது.நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியிலும்,

சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னிதி கொண்டு அருள்பாளிக்கின்றனர். இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 15- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறும், முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும்,

தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்ல்வமுத்துகுமரசாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம். பங்குனி பிரம்மோற்ச்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்க்கும் யானை,

பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி,ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் (பிளிருதல்) எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது. நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி,சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

Tags

Next Story