ஓமலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்

ஓமலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்

ஓமலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார்


ஓமலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஓமலூர் மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆத்தூர் எம்.எல்.ஏ. ஜெய்சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, கம்மங்கூழ், இளநீர் ஆகியவற்றை வழங்கி பேசினார். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், ஒன்றிய அவைத்தலைவர்கள் பரமசிவம், முருகன், தங்கவேல், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story