முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர்,காந்திமதியம்மன் காட்சி

முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர்,காந்திமதியம்மன் காட்சி

நெல்லையப்பர், காந்திமதியம்மன் 

சித்திரை மாத வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு முத்து அங்கி அலங்காரத்தில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினர்.
திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்ரல் 27) நான்காம் நாள் இரவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் "முத்து அங்கி" அலங்காரத்தில் காட்சி அருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி செய்திருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story