புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கம்

புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கம்

பாலம் கட்டும் பணி துவக்கம் 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டன் துறையில் ரூபாய் 1.59 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி துவங்கியது.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை ஏற்று AVM - கால்வாயின் குறுக்கே மார்த்தாண்டன் துறை - அரசு மருத்துவமனை இடையே பாலம் அமைத்திட கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA அவர்கள் தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து அரசிடமிருந்து ரூபாய் 1 கோடி 59 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று விஜய்வசந்த் MP அவர்கள் உடன் இணைந்து பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் பங்கு தந்தை, பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story