செய்யாற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம்

செய்யாற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம்
சட்டபேரவை துணைத்தலைவர் துவக்கி வைப்பு 
திருவண்ணாமலை மாவட்டம், குருவிமலை - காலூர் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை - காலூர் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 921.55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை சட்டப் போவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி. சரவணன், செங்கம் எம் எல் ஏ. மு.பெ கிரி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ வ வே கம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story