தற்கொலை

தற்கொலை
X
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன் சூர்யா (வயது 24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த 15ம் தேதி இரவில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை சுகுமார் கண்டித்து உள்ளார். அதன்பிறகு சூர்யா படுக்கை அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார். நேற்று முன்தினம் மதியம் சுகுமார் படுக்கை அறைக்குள் சென்று பார்த்தபோது சூர்யா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சூர்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சூர்யா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story