பரபரப்பு

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்ற ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன.யானைகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், வாகனங்களில் உணவு ஏதாவது உள்ளதா என வழிமறைத்து உணவை தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்மண் திட்டு என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே நின்று அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சிறு தொலைவில் நிறுத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக யானைகள் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் சுற்றி கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தண்ணீருக்காக சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.எக்காரணம் கொண்டு வனச்சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.
Next Story

