வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை...  தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் அறிவுறுத்தல்.  

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவுரை.

திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொளிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்., தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல். சார் ஆட்சியர் (செய்யார்) அனாமிகா, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்மந்தாகினி (திருவண்ணாமலை), ம.தனலட்சுமி (ஆரணி), அனைத்து வட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை ஆட்சியர் நிலையிலான பொறுப்பு அலுவலர்கள் (Nodal Officers) இணை இயக்குநர், வேளாண்மை, முதன்மை கல்வி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருவண்ணாமலை, செய்யார் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், உதவி இயக்குநர். நகராட்சி நிர்வாக, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, செய்யார் மற்றும் உதவி செயற்பொறியாளர், பொ.ப.து. கட்டிடம்(க&ப) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேதமடைந்த பொது கட்டிடங்கள் பாழடைந்த கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள். பேருந்து நிலையங்கள், மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றினை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இயற்கை இடர்பாட்டினால் இறக்கும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கிட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பிரேத பரிசோதனை அறிக்கையை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தன்னார்வலர்களையும் ஆப்தமித்ரா தன்னார்வலர்களையும் வைத்துக்கொள்ள வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். தயார்நிலையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஆகியோர் வெள்ள பாதிக்க கூடிய பகுதிகளை கள ஆய்வு செய்து நிவாரண மையங்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

உயிர்காக்கும் உபகரணங்களை மற்றும் இதர உபகரணங்கள் மற்றும் வாகனங்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை 2023 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கேட்டுக்கெண்டார்.



Tags

Next Story