ஆட்சிமொழி சட்ட வார விழா - வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

ஆட்சிமொழி சட்ட வார விழா - வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.தொழிலாளர் உதவி ஆணையர் லே.திருநந்தன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பொ.பாரதி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், பொருளாளர் செ.க.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வணிகர்கள் தங்களது நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழில் பெயர் பலகை வைக்கும் நிறுவனங்களுக்கு அரசு பரிசளித்து, சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என வணிகர்கள் ஆலோசனை வழங்கினர். மேலும் தமிழ்நாடு அரசு வணிகா்கள் தங்களது கடைக்கு தமிழில் பெயர் பலகைகளை மாற்றிட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story