ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆத்தூர் நகராட்சி 26 வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறு அமைக்க நகர மன்ற உறுப்பினர், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 26- வதுவார்டு பகுதியில் கல்உடைத்தான் மலை, மற்றும் குடகு பகுதி மாரியம்மன் கோவில் இப்பகுதி வாழும் பொது மக்களுக்கு தண்ணீர் வசதி‌ இல்லாமல் லாரி தண்ணீர் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது ஆழ்துளை கிணறு மூலமாக பொதுமக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்வதற்காக நகராட்சி உதவிபொறியாளர்பிரகாஷ், நகரமன்ற உறுப்பினர் தேவேந்திரன் இடத்தினை ஆய்வு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story