அதிகாரிகள் - வியாபாரிகள் வாக்குவாதம்

அதிகாரிகள் - வியாபாரிகள்  வாக்குவாதம்

வாக்குவாதம் 

நெல்லை மாநகராட்சி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பால பகுதியில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது வியாபாரிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி சார்பில் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இயங்கி வரும் பல்வேறு கடை உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. வரி செலுத்தாத கடைகளுக்கு நேற்று (பிப்.29) இரவு அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story