ஓமந்தூரார் பிறந்த நாள் விழா

ஓமந்தூரார் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் ஓமந்தூரார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் ஓமந்தூரார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலை பள்ளியில் ஓமந்தூர் ராமசாமி சுதந்திர போராட்ட தியாகி ஓமந்தூரார் ராமசாமி பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசாக சான்றிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டது. பொறுப்பு தலைமையாசிரியை கார்த்திகேயனி பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு ஓமந்தூரார் பற்றி எடுத்துரைத்தார். மாணவி மாணவிகள் ஓமந்தூரார் வழியில் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் ஆசிரியைகள் பாரதி, கவுரி, கலாமணி, சாந்தி, நிர்வாகிகள் கணேசன், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.காவேரி நகரில் நகரில் நடந்த விழாவில் முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமை வகித்தார்.

Tags

Next Story