வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை !

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை !

தற்கொலை

விராலிமலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விராலிமலை மனமேட்டுப் பட்டியை சேர்ந்தவர் பழனிவேல்(42). இவரது மனைவி போதும்பொண்ணு. பழனிவேலுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு போதும்பொண்ணு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் வீடு திரும்பியபோது, கழிப்பிடத்தில் உத்திரத்தில் பழனிவேல் துாக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து நோய் தாக்கத்தால் பழனிவேலு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story