அரசு பேருந்து இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

அரசு பேருந்து இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

காவல்துறை விசாரணை


காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் அரசு பேருந்து மீது மோதி உயிரிழப்பு காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் ஒன்றியம், சிக்கன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அஜித், இவர் இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அனுமந்தபுரம் பகுதியில், அரசு பேருந்து பயணிகளை இறக்குவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்புறம் அஜித் ஓட்டி வந்த இருசக்கரம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story