மாநில அளவில் குழந்தைகளுக்கான திறந்தவெளி 2 வது சதுரங்க போட்டி
சதுரங்க போட்டி
மாநில அளவில் குழந்தைகளுக்கான திறந்தவெளி 2 வது சதுரங்க போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது
தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் மற்றும் திறந்தவெளி 2 வது சதுரங்க போட்டி திருவண்ணாமலை பாண்டுரங்க மஹால் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சாம்பியன்ஸ் செஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற எட்டு மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. மேலும் 120-க்கும் மேற்பட்ட கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் ஆடிட்டர் திருமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம், துணைத்தலைவர்கள் சிங்காரவேலன், உசேன், செயலாளர் பாலமுருகன் மற்றும் பொருளாளர் தமிழரசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Tags
Next Story