வத்தல் மலையில் ஏடிஎம் மையம் திறப்பு

வத்தல் மலையில் ஏடிஎம் மையம் திறப்பு

ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

வத்தல்மலை பெரியூரில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை பெரியூர் கிராமத்தில் இந்தியன் வங்கியின் புதிய ATM மையத்தினை கலெக்டர் கி.சாந்தி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் துணை மண்டல மேலாளர் பீரேந்திர குமார் இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம்,

வட்டாட்சியர் ஜெயசெல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்த தாவது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏடிஎம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் வத்தல்மலை ஊராட்சி பெரியூர் , கட்டலங்காடு, கடுங்கல்லூர், சின்னாங்காடு, ஒன்றியகாடு, புலி யனூர், மன்னாங்குளி நாய்க்கனூர், பால் சிலம்பு ஆகிய 9 மலை கிராமங்களில் உள்ள சுமார் 700 குடும்பத்தைச் சார்ந்த 5000 கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகை,

சுய உதவிக் குழுவின் கடன் தொகை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படும் பால் பட்டுவாடா, 100 நாள் பணியின் மூலம் வழங்கப்படும் சம்பளத் தொகை, PM kissan திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு கிடைக்கப் பெரும் ரூ. 6000 உள்ளிட்ட பல்வேறு வகையான நிதிகளை ஏடிஎம் மூலம் பெற்று பயன் பெற உள்ளனர். அவசர தேவைகளுக்காக வங்கியில்,

பணம் எடுக்க சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து தருமபுரி நகரப் பகுதிக்கு வந்து பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலைய இருந்தது நகரப் பகுதிக்கு இணையாக மலைப்பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதியும் கிடைக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதல் படி இன்று ஏடிஎம் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது வத்தல்மலைக்கு அரசு ஆரம்பசுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை,

பேருந்து வசதி சாலை வசதிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்து வசதி , ஆம்புலன்ஸ் வசதி, வங்கி கிளை போன்ற வசதிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து படிப்படியாக நிறைவேற்றப்படும் மகளிர் திட்டம் மற்றும் முன்னோடி வங்கியின்,

சார்பில் வத்தல்மலை பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் அட்டைகள் வழங்கும் பணி விரைவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story