பெயிண்டருக்கு கத்திக்குத்து - கல்லூரி மாணவர் கைது

பெயிண்டருக்கு கத்திக்குத்து - கல்லூரி மாணவர்  கைது
பைல் படம்
நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக பெயிண்டரை கத்தியால் குத்திய மாணவரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார் (30 ). பெயிண்டர். இவருக்கும் அறுகு விளை பகுதியை சேர்ந்த தீபக் என்ற தினா (22) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதீப்குமார் பார்வதிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், ரோகித், யோகேஷ் உட்பட ஆறு பேர் சேர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆத்திரமடைந்த தீபக், விக்னேஷ் உட்பட 6 பேர் சேர்ந்து பிரதிப்குமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் தீபக்கை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் விக்னேஷ் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தீபக் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story