காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் வட்டாரத்தில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை உட்பட10க்கும் அதிகமான கிராமங்களில் முன்பட்ட குருவை நடவுக்காக தெளிக்கப்பட்டு லேசாக வளர்ந்து இருந்த நாற்றாங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அன்னப்பன் பேட்டை மேலட்டூர் கோனிய குறிச்சி குண்டூர் உள்பட 10க்கு அதிகமான கிராமங்களில் மின்மோட்டாரை பயன்படுத்தி குருவை சம்பா தாளடி கோடை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முற்பட்ட குருவை சாகுபடி 20 ஏக்கரில் நடவு செய்வதற்காக அன்னப்பன்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோ 51 ரக விதை நெல்லை விவசாயிகள் நாற்றாங்களில் தெளித்து இருந்தனர் விதைநெல் தற்போது முளைப்பு பருவத்தில் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து நாற்றங்காலை சேதப்படுத்தி வருகின்றன .

இதனால் விதை நெல் முளைப்பு திறன் இன்றி வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதே போல அந்த பகுதியில் 10 க்கு அதிகமான கிராமங்களில் 500 ஏக்கரில் நடவு செய்வதற்காக விதை நெல் தெளிக்கப்பட்டிருந்த நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன இது தொடர்பாக அன்னப்பன்பேட்டை சேர்ந்த முன்னோடி விவசாயிகளான மணவாளன்,சுப்பிரமணியன் கூறியதாவது அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி குருவை சாகுபடியை முன்கூட்டியே தொடங்கி விடுவோம் இதன்படி கோ 51ரக விதை நெல்லை வாங்கி நாற்றங்களில் தெளித்தோம்.

அவை லேசாக வளர்ந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வயலில் இறங்கி உருண்டு புரண்டு நாற்றங்காலை சேதப்படுத்தி உள்ளன தனியாரிடமிருந்து 30 கிலோ கொண்ட கோ 51 ரக விதை நெல் சிப்பத்தை ரூ 1300 க்கு வாங்கி நீர் பாய்ச்சுதல், ஆள் கூலி என ஏக்கருக்கு மொத்தம் ரூ.2500 வரை செலவாகி உள்ளது. இதேபோல இந்த பகுதியில் 10க்கும் அதிகமான கிராமங்களில் 500 ஏக்கர் நடவு செய்ததற்காக தெளிக்கப்பட்டிருந்த நாற்றங்கலை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதுடன் இதே ரக விதை நெல் கிடைப்பது அரிது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags

Read MoreRead Less
Next Story