நாமக்கல்லில் இன்று நாடாளுமன்ற தொகுதி திமுக பிரச்சார கூட்டம் - K.R.N.ராஜேஸ்குமார் MP அழைப்பு

நாமக்கல்லில் இன்று நாடாளுமன்ற தொகுதி திமுக பிரச்சார கூட்டம் - K.R.N.ராஜேஸ்குமார் MP அழைப்பு

 திமுக பிரச்சார கூட்டம்

தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
நாமக்கல்லில் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நாடாளுமன்ற தொகுதி திமுக பரப்புரை கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திமுகவினருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்னும் தலைப்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் இன்று (16ம் தேதி) மாலை 5 மணி அளவில் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் நடைபெற உள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதனை முன்னிட்டு நாமக்கல் ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இந்நாள் – முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story