நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
செங்கல்பட்டு தேர்தல் அலுவலர் அருண் ராஜிடம் மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஶ்ரீபெரும்புதூர் நாடளுமன்ற தொகுதிக்கு INDIA கூட்டணியின் திமுக வேட்பாளர் TR.பாலு செங்கல்பட்டு மணிகூண்டில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் படை சூழ ஊர்வலமாக சென்று, செங்கல்பட்டு தேர்தல் அலுவலர் அருண் ராஜிடம் மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள்,நகர மன்ற தலைவர்கள்,ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் காட்டாங்குளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ,கூடுவாஞ்சேரி மறைமலைநகர் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும்,உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள்,கலந்து கொண்டனர்.
Next Story