பாஸ்போர்ட் முறைகேட்; ஒருவர் கைது

பாஸ்போர்ட் முறைகேட்; ஒருவர் கைது

 பாஸ்போர்டில் முறைகேடு செய்து, மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணியை விமான நிலையப் போலீசார் கைது செய்தனர்.

பாஸ்போர்டில் முறைகேடு செய்து, மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணியை விமான நிலையப் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து மலிண்டோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை இரவு திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றபிபிரிவினா் சோதனை மேற்கொண்டனா். இதில் சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் வட்டம், முத்தூா் பகுதியைச் சோ்ந்த சோ.முருகன் (43) என்ற பயணியின் கடவுச்சீட்டில் ஒரு பக்கத்தை காணவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளாா். இதனையடுத்து குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story