கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைக்க கோரிக்கை !

கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைக்க கோரிக்கை !

சாலை

ஜல்லி கொட்டப்பட்டுள்ள இடத்தில், தார் ஊற்றி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, விநாயகபுரம் பிரதான சாலையில் இருந்து, பச்சையம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க ஜல்லி கற்கள் கடந்த மாதம் கொட்டப்பட்டது. ஆனால், அடுத்தகட்ட பணியை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், இருசக்கர வாகனங்கள் பழுதாகின்றன. காலணி அணியாமல் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ஜல்லி கொட்டப்பட்டுள்ள இடத்தில், தார் ஊற்றி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story