வரிசையில் நின்று வாக்களித்த பென்னாகரம் எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் வாக்குப்பதிவு செய்தார்.
இன்று தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முதல் மற்றும் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி - பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி 201- ல் அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சரியாக காலை 7.00 மணிக்கு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணி எனது வாக்கினை செலுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story