செங்கோட்டையில் ஓய்வூதியா் தின விழா

செங்கோட்டையில் ஓய்வூதியா் தின விழா

ஓய்வூதியர் தின விழா

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் செங்கோட்டை கிளை சாா்பில் 31ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம், ஓய்வூதியா் தின விழா செங்கோட்டையில் நடைபெற்றது. கிளைத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வசந்தா முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம் இறைவணக்கமும், மாடசாமி தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினா். சங்கச் செயலா் ஈஸ்வரன், பொருளாளா் செண்பகக்குற்றாலம் ஆகியோா் அறிக்கைகள் வாசித்தனா். உறுப்பினா்கள் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டில் 80 வயதைக் கடந்த மூத்த உறுப்பினா்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மாநில துணைத் தலைவா் வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story