மாநகர காவல்துறையின் மக்கள் குறைதீா் கூட்டம்

மாநகர காவல்துறையின் மக்கள் குறைதீா் கூட்டம்

குறைதீர் கூட்டம்

தமிழக அரசின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருச்சி கே.கே. நகா் ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்தாா். இதில் காவல் துணை ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.கூ

ட்டத்தில், பொதுமக்கள் 47 மனுக்களை அளித்தனா். அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆணையா், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். திருச்சி மாநகர காவல் துறையில் நிகழாண்டில் இதுவரை மக்களுடன் முதல்வா் முகாம், முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 958 மனுக்கள் பெறப்பட்டு, 876 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 82 மனுக்கள் விசாரணையில் உள்ளன. காவல்துறை ஆணையரின் சிறப்பு குறைதீா் முகாமில் அளித்த 765 மனுக்களில் 451 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.

Tags

Next Story