பெட்டிக்கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

பெட்டிக்கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கைது

நத்தத்தில் ரகசிய இடங்களில் 5 லட்சம் மதிப்புள்ள 560 கிலோ புகையிலை பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைப்பு.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தத்தில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த (பிப்.16)-ஆம் தேதி காவல்துறை தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னகுமரசாமி, நத்தம் உதவி ஆய்வாளர் தர்மர் தலைமையிலான போலீஸார் கொண்ட தனிப்படையினர் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் ரகசிய இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பதுக்கி வைத்திருந்த 560 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஜஹாங்கீரை சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story