பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி பிளம்பர் பரிதாப சாவு

பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி பிளம்பர் பரிதாப சாவு

பலியான இளையராஜா 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி பிளம்பர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி கோவில் தேவராயன்பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருடைய வீட்டில் நீர் இறைக்கும் மின்மோட்டார் பழுது நீக்கம் செய்யும்போது ராஜகிரி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிளம்பர் இளையராஜா வயது 46 என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உள்ளது.

உடனடியாக அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர. இறந்த செய்தி கேட்டவுடன் இளையராஜா குடும்பத்தினரும் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி பரிதாபமாக இருந்தது.

இளையராஜா மனைவி சுமத்ரா வயது 43 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story