பிளஸ் 2 மாணவி மாயம்!

பிளஸ் 2 மாணவி மாயம்!

வழக்கு பதிவு 

பிளஸ் 2 மாணவி மாயமான நிலையில் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் மெய்யூரணி கரையில் வசிப்பவர் முருகேசன். இவரது 17 வயது மகள் கடியாப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தேர்வு எழுதி முடித்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமயம் தாலுகா போசம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் மகள் ராஜேஸ்வரி (20). பட்டதாரியான இவர் சம்பவத் தன்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமயம் தாலுகாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 10 பெண்கள், மாணவிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story