சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - காவல்துறை அறிவுரை

சிறுத்தை நடமாட்டம்  குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - காவல்துறை அறிவுரை
சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
கபிஸ்தலம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் காவல் சரகம் உடப்பாங்கரை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. அது உறுதி செய்யப்படாத செய்தி.. பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வீண் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story