திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியவா் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய நபர் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பெரிய கடை வீதி, பெரிய செட்டித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான குழுவினா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, ர. சங்கா் (55) என்பவா் அருகிலுள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மாவாக அரைத்து இட்லி தோசை வியாபாரம் செய்து வந்ததும், இதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவா் வைத்திருந்த சுமாா் 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story