கல்லூரி மாணவி மாயம் – காவல்துறையினர் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் – காவல்துறையினர் விசாரணை

மாணவி மாயம்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மாயமான கல்லூரி மாணவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே பொன்னேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்க வில்லை. இதுகுறித்து நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story