ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார்

ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார்

பெண் மாயம்

கள்ளகுறிச்சி மாவட்டம்,பாசார் கிராமத்தில் மாயமான பள்ளி மாணவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தனலட்சுமி,17; ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தனலட்சுமி மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தனலட்சுமியை தேடினர். எங்கு தேடியும் கிடைக்க வில்லை. தாய் செல்வாம்பாள் புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story