பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு - காவல்துறையினர் விசாரணை

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு - காவல்துறையினர் விசாரணை

காவல்துறையினர் விசாரணை

பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி பறிப்பு காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட மகேந்திரமங்கலம் அருகே கருக்கனள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி லோகேஸ்வரி. இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினசரி வேலைக்கு டூவீலரில் சென்று வந்தார். நேற்று, வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை பகுதியில் வந்த போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த வாலிபர், திடீரென லோகேஸ்வரியை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால், கதறி துடித்த லோகேஸ்வரி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தினசரி லோகேஸ்வரி டூவீலரில் வேலைக்கு சென்று வருவதை நோட்டமிட்டு, வாலிபர் கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அவரை மகேந்திரமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story