பொங்கல் விழா கொண்டாட்டம்

ஒட்டன்சத்திரம், வடமதுரை, தாடிக்கொம்பு உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதே போல வடமதுரையில் இன்ஸ்பெக்டர் தெய்வம், சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா தலைமையில் பொங்கல் விழா நடந்தது. இதே போல சத்திரப்பட்டி தாடிக்கொம்பு ஆகிய போலீஸ் ஸ்டேஷன் களிலும் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் விழாவை முன்னிட்டு போலீஸ் ஸ்டேஷன் சீரியல் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. பொங்கல் போலீசருக்கு இடையே மியூசிக் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பொதுமக்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags

Next Story