அஞ்சல்துறை குறைதீர் முகாம்

அஞ்சல்துறை குறைதீர் முகாம்

அஞ்சல் துறை 

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 21ம் தேதி நடக்க உள்ளதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு கோட்ட அளவில் தபால் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 21-ந்தேதி மதியம் 12 மணிக்கு சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் தபால் சம்பந்தமாக குறைகள் குறித்து நேரில் தெரிவிக்கலாம். அல்லது தபால் மூலம் வருகிற 18-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம். முகாமில் மணியார்டர், பதிவு, விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால், அனுப்பிய தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது தபால் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால், கணக்கு, பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story