சந்தோசத்தை பரப்ப விற்பனைக்கு வந்த பானைகள்

சந்தோசத்தை பரப்ப விற்பனைக்கு வந்த பானைகள்

விற்பனைக்கு வந்த பானைகள்

திண்டுக்கல்: பட்டி பெருக பால்பானை பொங்க,பொங்கலோ பொங்கல் என பானையில் பொங்கி வழியும் சந்தோசத்தை பரப்ப விற்பனைக்கு வந்த பானைகளால் பொதுமக்கள் குதுகழிக்கின்றனர். பாறைப்பட்டியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானைகள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சிலர் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். பானை விலை அதன் அளவை பொறுத்து ரூ.80 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story