செண்பகராமன் புதூர் ஊராட்சியில் போராட்டம் - பேரூராட்சியிடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

செண்பகராமன் புதூர் ஊராட்சியில் போராட்டம் - பேரூராட்சியிடன் இணைப்பதற்கு எதிர்ப்பு
போராடிய மக்கள்
ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 25-க்கு மேற்பட்ட ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அந்தந்த ஊராட்சி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் செண்பகராமன் புதூர் ஊராட்சியை தாழக்குடி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த முடிவை கைவிட வலியுறுத்தியும், செண்பகராம்புதூரில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், ஊராட்சித் துணைத் தலைவர் தேவதாஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆண்கள், பெண்கள் என ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story