வாக்குசீட்டு தேர்தல் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

வாக்குசீட்டு தேர்தல்  கோரி  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மேசியா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் தேவகி, மாநகர் மாவட்ட செயலாளர் அலிகாலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் திலீப் சிங் வரவேற்றார். மேலிட பொறுப்பாளர் தமிழினியன், மண்டல துணைச் செயலாளர் பகலவன் உரையாற்றினார்கள். இதில் திருமாவேந்தன், ஜெயன் ,சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story