சேலத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்

சேலத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்

சேலத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்

சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 11ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. அதன்படி சேலம் இரும்பாலை ரோடு, தளவாய்பட்டி பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில், ஆணையாளர் சிவகுமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையில் நடக்கிறது.

அதன்படி காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கான கூட்டம் நடக்கிறது. மதியம் 3 முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. குறைகள் தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள், அதன் விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story