கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை விசாரணை


கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தினர்.
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பேசும் போது, பொதுமக்கள் தங்களையும் தங்கள் உடைமைகளை சரியான விழிப்புணர்வுடன் பாதுகாப்பு செய்து கொள்ள கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இதில் சாய்பாபா காலனி, தாமரை நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story