தேர்தல் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - ஆட்சியர்

தேர்தல் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - ஆட்சியர்

மாவட்ட ஆட்சியா் சங்கீதா 

மதுரை மக்களவைத் தொகுதி தோதல் பணிகளில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் பொதுமக்கள் தோதல் பாா்வையாளா்களை நேரில் சந்தித்து புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மக்களவைத் தொகுதியின் தோதல் பொது பாா்வையாளராக ராஜேஷ்குமாா் யாதவ், காவல் பாா்வையாளராக ரோஹன் பி. கனய் ஆகியோா் பணி ஏற்றுள்ளனா். இருவரும், மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ளனா். பொது பாா்வையாளா் ராஜேஷ்குமாா் யாதவை தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் நேரில் சந்தித்து, தோதல் தொடா்பான விதிமீறல்கள், புகாா்களைத் தெரிவிக்கலாம் அல்லது 89259 25380 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். காவல் - பாா்வையாளரை திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாள்களில் காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் நேரில் சந்திக்கலாம் அல்லது 8925925389 என்ற கைப்பேசி எண்ணில் அவரை தொடா்புகொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என அதில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

Tags

Read MoreRead Less
Next Story