சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

சாலை

சாலை பழுதால் அடிக்கடி வாகன பழுதும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இச்சாலையை விரைவில் சீரமைக்க மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்தது நமணசமுத்திரம். இங்கிருந்து மேலத் தேமுத்துப்பட்டி,கீழ தேமுத்துப்பட்டி வழியாக கம்பஞ்செட்டி சத்திரத்திற்கு செல்ல முடியும். இதற்காக 2 கிமீ தூரத்திற்கு தார்ச் சாலை உள்ளது. இதில் கற்கள்பெயர்ந்துகுண்டும் குழியுமாக மாறிவிட்டது.சாலை பழுதால் அடிக்கடி வாகன பழுதும், விபத்துக்களும் ஏற்படுகின்றன.தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அரசு பழு தடைந்துள்ள இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story