பெரம்பலூர் : வருகின்ற 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

பெரம்பலூர் : வருகின்ற 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர், மஜீரா, நல்லூர் ஆகிய கிராமத்தில் பிப்.14ம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் வடக்கு மஜீரா, நல்லூர் கிராமத்தில், எதிர்வரும் பிப்ரவரி 14ம் தேதி புதன் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, பெருமத்தூர் வடக்கு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெருமத்தூர் வடக்கு கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்பே மனு அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என பிப்ரவரி 9ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story