நித்திரவிளை அருகே பியூட்டி பார்லரில் சிறுவனிடம் அத்துமீறல் - போலீசார் விசாரணை

நித்திரவிளை அருகே பியூட்டி பார்லரில் சிறுவனிடம் அத்துமீறல் - போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
நித்திரவிளை அருகே பியூட்டி பார்லரில் சிறுவனிடம் ஆபாச படங்களை காட்டி அத்துமீறியதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பாலாமடம் என்ற இடத்தில் தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த ஒருவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு 9 மணி அளவில் தூத்தூர் பகுதி சேர்ந்த 11 வயது சிறுவனை அவனது சித்தப்பா அழைத்து வந்தார். அப்போது கூட்டமாக இருந்ததால், அந்த சிறுவனுக்கு முடி வெட்ட ஊழியர்களிடம் கூறிவிட்டு, நித்திரவிளை சந்திப்புக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவர் பியூட்டி பார்லருக்கு திரும்பி வரும் போது சிறுவனின் கழுத்தை கடை ஊழியர் ஒருவார் நெரித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் கூச்சலிட்டவாறு ஓடி வந்து சிறுவனை மீட்டார். சிறுவனிடம் விசாரித்த போது கடை ஊழியர் செல்போனில் ஆபாச படத்தை காட்டியதாகவும், பின்னர் கடை ஊழியர் அத்துமீறியதாகவும், அதற்கு உடன்படாததால் தனது கழுத்தை நெரித்ததாகவும் சிறுவன் தெரிவித்தார். இது குறித்து சிறுவனின் சித்தப்பா நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை போலீசார் அசாம் மாநிலத்தை சேர்ந்த கடை ஊழியர்கள் ரெண்டு பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story