ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி ஆண்டு விழா.

ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி ஆண்டு விழா.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில் பள்ளியின் செயலர் பி.சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளித் தலைவர் எம்.குமரவேல், துணைத் தலைவர் ஏ.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் எஸ்.செல்வராஜன், துணைச்செயலர் பி.சத்தியமூர்த்தி, அறங்காவலர் ஏ.ஆர்.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலசலிங்கம் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் ஏ.பரிவழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நேரமேலாண்மை, சிந்தனை ஆற்றல், நவீன தொழில்நுட்பம், தன்னம்பிக்கை, புத்தகங்கள் படிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்தும் மாணவர்களிடம் பேசினார். பின்னர் மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் வி.செந்தில், துணை முதல்வர் எஸ்.சுனில்குமார், சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் ஆர்த்தி, எஸ்ஆர்வி ஹைடெக் பள்ளி தலைமையாசிரியர் ப.வள்ளியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story