மசாலா பொறி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார் ராயபுரம் மனோ

மசாலா பொறி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார் ராயபுரம் மனோ
அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ தள்ளுவண்டி கடையில் மசாலா பொறி வாக்கு சேகரித்தார்.
அதிமுக வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று 14 ஆவது நாளாக மாலையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 47வது தெற்கு வட்டம் பாரதிநகர் மெயின் தெருவில் அமைந்துள்ள திருமால் முருகன் கோவில் தரிசனம் செய்து தொடங்கி, பாரதி நகர் 1வது தெரு முதல் 11ஆவது தெரு வரை, 47-வது மத்திய வட்டம் E.H.ரோடு, அருள்மிகு ஸ்ரீ கமல் விநாயகர் திருக்கோயில் தொடங்கி J.J.நகர் A1 தெரு, J.J.நகர் 3வது தெரு, ‘D’ தெரு, J.J.நகர் ‘B’ தெரு சென்னை தொடக்கப்பள்ளி, பெரியார் நகர் 3வது தெரு, கோவிந்தசாமி நகர் மெயின் ரோடு, பழைய நீரூற்று சாலை, J.J.நகர் A2 தெரு J.J.நகர் K தெரு, J.J.நகர் J தெரு, காமராஜர் நகர் 2வது தெரு, காமராஜர் நகர் மெயின் தெரு, காமராஜர் நகர் 9வது தெரு, ஆனந்தநாயகி 2வது தெரு முதல் 5வது தெரு வரை, அம்பேத்கர் நகர் 2வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜீவ் காந்தி நகர் வரையிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன், பிரச்சாரம் மேற்கொண்டார், உடன் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு, கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுக வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பேசிய பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன், மெத்த படித்தவர், கரை படாத கரத்திற்க்கு சொந்தக்காரர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்து வருகிறது, இதில் நாம் சந்தித்து என்ன? இருளில் தமிழகம் மூழ்கியது தான் உண்மை. ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள், ஆனால் ஒவ்வொரு நாளும் தெருவுக்கு ஒரு கடை திறக்கப்பட்டு வருகிறது. எம் ஜி ஆர் ஏழை மக்கள் உழைப்பாளிகளுக்கு தேவையானது அறிந்து செய்தார். இந்த நாட்டின் அடித்தட்டு மக்கள், பெண்கள், குழந்தைகள் மேல் தான் அவர் கவனம் இருந்தது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டும் தான் திமுகவின் நோக்கம், அதனை மாற்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதிமுகவை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள், பண்ணைக்காரர்கள் உருவாக்கிய கட்சி அல்ல அதிமுக பாமரன் உருவாக்கிய கட்சி இது அழிக்க முடியாது என்று பேசினார். தொடர்ந்து, கொளத்தூர் பகுதியில் கங்கா திரையரங்கம் அருகில் தள்ளுவண்டி கடை ஒன்று மசாலா வேர்க்கடலை பொறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ.

Tags

Read MoreRead Less
Next Story