கல்குவாரி கிஷர்களில் ஆன்லைன் மூலம் பணம் வாங்குவதற்கு மறுப்பு

கல்குவாரி கிஷர்களில் ஆன்லைன் மூலம் பணம் வாங்குவதற்கு மறுப்பு

குவாரி

கல்குவாரி கிஷர்களில் ஆன்லைன் மூலம் பணம் வாங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத் துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல கல் குவாரி கள் செயல்படுகின்றன. கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் பாறைகள், கிரஷர்களில் நொறுக்கப்பட்டு,

ஜல்லி, 'எம் - -சாண்ட், பி - சாண்ட்' போன்றவை தயார்செய்யப்படுகின்றன. லாரிகள் வாயிலாக டன் கணக்கில் ஜல்லி, எம் - -சாண்ட், பி - சாண்ட், கருங்கற்கள் ஆகியவை கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பெ

ரும்பாலான கல் குவாரி கிரஷர்களில் விற்பனை செய்யப்படும் ஜல்லி, எம்- - சாண்ட், பி - சாண்ட் போன்ற பொருட்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து நேரடி பணமாக மட்டுமே வாங்கப்படுகிறது. பெட்டிக்கடை முதல் பெட்ரோல் பங்க் வரை,

அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடக்கும் இந்த காலகட்டத்தில், கல்குவாரி கிரஷர்களில் ஆன்லைனில் பணம் வாங்க மறுப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags

Next Story