தூத்துக்குடியில் வாகன பழுது நீக்குவோர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தூத்துக்குடியில் வாகன பழுது நீக்குவோர்  சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

நிவாரண பொருட்கள்

தூத்துக்குடியில் மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீரினால் பாதிப்படைந்த தூத்துக்குடி வட்டார இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்க உறுப்பினர்களுக்கு முன்னாள் ஆணையர் சண்முகம் சார்பில் நிவாரண உதவிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

விழாவில் பேசிய மேயர், "மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்க உறுப்பினர்களுக்கு மாநகராட்சி முன்னாள் ஆணையர் சண்முகம் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். மாநகராட்சி முன்னாள் ஆணையர் நம் மாநகரில் பணி செய்து இருந்தாலும் இப்பொழுது நம் மாநகரின் மீதும் மக்களின் மீதும் அன்பு கொண்டு இது போன்று நிவாரணம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

Tags

Next Story