திருவண்ணாமலை தேரடி வீதியில் இரும்பு தடுப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி வீதியில் இரும்பு தடுப்புகள் அகற்றம்

தடுப்பு அகற்றப்பட்ட இடம்


திருவண்ணாமலை நகரின் முக்கியமான சாலையாக தேரடி வீதி சாலை உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சமீப காலமாக சாலையின் நடுவில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளுக்கும் சாலை யோர ஆக்கிரமிப்புகளுக்கும் இடையில் உள்ள குறுகிய சாலை வழியாக தேரடி வீதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வந்தது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்திற்குள் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக தேரடி வீதியில் சாலையின் நடுவில் இருந்த பேரி கார்டுகள் அகற்றப்பட்டு சாலைகள் விசாலமாக காட்சி தருகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையை கடந்து செல்ல முடிகிறது.இந்த மாற்றத்தை ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்கு வரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story